மாரியும் மழையும்

மாரியும் மழையும்
0Shares
மாரியும் மழையும்
*ஏன் அடைமழை என்கிறோம்?*
*அடைமழை = வினைத்தொகை!*
*அடைத்த மழை*
*அடைக்கின்ற மழை*
*அடைக்கும் மழை*
*விடாமல் பெய்வதால், ஊரையே ‘அடை’த்து விடும் மழை= அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை!*
*கனமழை வேறு! அடைமழை வேறு!*
*தமிழில், மழை!*
*1. மழை
*2. மாரி
*3. தூறல்
*4. சாரல்
*5. ஆலி
*6. சோனை
*7. பெயல்
*8. புயல்
*9. அடை (மழை)
*10. கன (மழை)
*11. ஆலங்கட்டி
*12. ஆழிமழை
*13. துளிமழை
*14. வருள்மழை
*மழ = தமிழில் உரிச்சொல்!*
*மழ களிறு= இளமையான களிறு*
*மழவர் = இளைஞர்கள்*
*அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே..*
*மழை எனும் சொல்! மழ + ஐ*
*இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை காரணப் பெயர்!*
*மழை வேறு/ மாரி வேறு!*
*மழை= இள மென்மையாக அலைந்து பெய்வது,காற்றாடி போல!*
*மாரி= சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல!*
*மார்+இ= மாரி!தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்!*
*அதுதான் மாரி+அம்மன்.
*1. ஆலி – ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி – உடலோ உடையோ நனையாது*
*2. தூறல் – காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை – புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்.*
*3. சாரல் – பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்.. மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்……*
*சாரல் – சாரம் என்பன சாய்வை குறிக்கும் சொற்கள்,
*சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள்*
*சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும்..மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்*
*4. அடைமழை – இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை*.
*அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும் குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்கு கிடைக்கும்..*
*5. கனமழை – துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்*
*6. ஆலங்கட்டி மழை – திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து , மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை
*7. பனிமழை – பனிதுளிகளே மழை போல பொழிவது. இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்..*
*8. ஆழி மழை – ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் மழையைக் குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை..*
*மாரி – காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளச்சேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும். இதனை நமக்கு அருளுவது கருணை மிகுந்த தாய் மாரியம்மன்.
இக்காரணங்களால் தான்.. இலக்கியங்களில் ‘ மாதம் மும்மழை பெய்கிறதா?’ என்று கேட்காமல். ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று கேட்பதாக நாம் காண்கிறோம்.

Comments

  1. Rajakumar

    தமிழ் மழையை பொழிந்து விட்டாய் நண்பா …

    • Srirangam Ramesh

      Tamizh Amizhdhu.

Leave a Reply to Srirangam Ramesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *