கடவுள் வாழ்த்து — ஸ்ரீரங்கம் ரமேஷ்

கடவுள் வாழ்த்து — ஸ்ரீரங்கம் ரமேஷ்
0Shares

கடவுள் வாழ்த்து

ஆதியுமாய் அந்தமுமாய்
மேவி நிற்கும் சக்தியே
அநாதியென்று காலம்வென்று
வீசும் பெருஞ்சோதியே
பாதிமூடியக்கண்கள் பாதி
பேரொளிப்படர்க் கடல்
மூடுமந்திரம் உரைக்கும்
மௌன மொழியின் ஓசையே
யாதுமாகி ஏழுலகும்
உயிர் விதைத்த விந்தையாய்
கடாவி நின்று காத்து வளர்
வாழ்வளிக்கும் வாஞ்சனை
மேலும் கீழும் திசைவிரித்து
இடம் வலம் வளர்விசை
ஓயாமல் முன்னும் பின்னும் நின்று
படைத்தவற்றை காத்தனை
தொடாமல் தொட்டுளம் புகுந்து
மனம் கவர்ந்த சிந்தையே
விடாமல் வந்தனைத்துடன்
கொண்டுசெல்லும் செம்மையே
இல்லாதவர்க்கும் உள்ள
தீராத பெருஞ்செல்வமே
நல்லாசி தரக்கோரி நிந்தன்
பாதம் தொட்டு வேண்டுவோம்.

– ஸ்ரீரங்கம் ரமேஷ்

Comments

  1. Jayabal

    அருமை ! வாழ்த்துகள்

Leave a Reply to Jayabal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *