ராதை பாடுவதுபோல் ஒரு பாட்டு – ஸ்ரீரங்கம் ரமேஷ்

ராதை பாடுவதுபோல் ஒரு பாட்டு – ஸ்ரீரங்கம் ரமேஷ்
0Shares

இதோ ராதை பாடுவதுபோல் ஒரு பாட்டு – ஸ்ரீரங்கம் ரமேஷ் எழுதியது ..
ராகம் : மோஹனம்
பல்லவி
கண்ணா …ஒரு கள்வன் நீயோ
வெண்ணைபோல் என்னை திருடவந்தாயோ
குழலாலே என்னை கட்டி
இசையாலே என்னை சுத்தி
சுத்தி சுத்தி வந்து, மயங்கவைத்தாயோ
சரணம் 1
யாரோடு யாரானாலும்
என்னோடு நீதான் கண்ணா
சொல்லாமல் சொல்லும் காதல்
என்னுள்ளம் கேட்டது உன்னால்
பொய்யென்றும் நின்றாய் நீயே
புகழென்றும் நின்றாய் நீயே
மெய் உந்தன் காதல் மட்டும்
மெல்ல என் இதயம் தட்டும் …………..கண்ணா ..
சரணம் 2
நினைவெல்லாம் நீயே கண்ணா
இரவிலே கருமை நீயே
நீங்காத நீல நிறத்தில்
ஏங்காத பெண்களுண்டோ
தாங்காத காதல் கொண்டேன்
தயங்காமல் தாவி வருவாய்
தூங்காத கண்கள் தடவி
கனவெல்லாம் அருகிலிருப்பாய் ………கண்ணா ..

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *