காஞ்சி காமாட்சி ! – – கண்ணதாசன்

காஞ்சி காமாட்சி ! – – கண்ணதாசன்
ptr
0Shares
கல்லாக மரமாக காய்த்தவர் தம்மையும்
கனியாக மாற்றும் அருளே
கந்தல் உடைகட்டி அம்மா என்பார் வாழ்விலே
கடலாக பொங்கும் அருளே
சொல்லோடு பொருளோடு சுவையோடு விளையாடச்
சுகமாக வந்த தமிழே
தொடைமீது குருநாதன் தனை வைதீச்வரனுக்கும்
சுடராக நிற்கும் அமுதே
கல்லார்க்கும் கற்றார்க்கும் காணார்க்கும் கண்டார்க்கும்
கரையேற்றம் நல்கும் கலையே
கல்யாணம் இல்லாத கன்னிப் பெண் கண்ணீரைக்
காலத்தில் நீக்கும் சிலையே
எல்லார்க்கும் எல்லோமும் எப்போதும் தருகின்ற
ஏகாம்பரன் தேவியே
எழில்பொழியும் காஞ்சிநகர் அரசு புரி ராணியே
ஏதில் காமாட்சி உமையே!
 – கண்ணதாசன் .

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *