கை வீணை ஏந்தும் கலை வாணியே!
32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
தெய்வங்களும் அவர்களுக்குரிய வீணையின் பெயர்களும்:*
1. பிரம்மதேவனின் வீணை – அண்டம்.
2. விஷ்ணு – பிண்டகம்.
3. ருத்திரர் – சராசுரம்.
4. கௌரி – ருத்ரிகை.
5. காளி – காந்தாரி.
6. லட்சுமி – சாரங்கி.
7. சரஸ்வதி – கச்சபி எனும் களாவதி.
8. இந்திரன் – சித்திரம்
.
9. குபேரன் – அதிசித்திரம்
.
10. வருணன் – கின்னரி.
11. வாயு – திக்குச்சிகை.
யாழ்.
12. அக்கினி – கோழாவளி.
13. நமன் – அஸ்த கூர்மம்.
14. நிருதி – வராளி யாழ்.
15. ஆதிசேடன் – விபஞ்சகம்.
16. சந்திரன் – சரவீணை
.
17. சூரியன் – நாவீதம்.
18. வியாழன் – வல்லகி யாழ்
.
19. சுக்கிரன் – வாதினி.
20. நாரதர் – மகதி யாழ் ( பிருகதி )
.
21. தும்புரு களாவதி ( மகதி ).
22. விசுவாவசு – பிரகரதி.
23. புதன் – வித்யாவதி.
24. ரம்பை – ஏக வீணை.
25. திலோத்தமை – நாராயணி.
26. மேனகை – வணி.
27. ஊர்வசி – லகுவாக்ஷி
.
28. ஜயந்தன் – சதுகம்.
29. ஆஹா, ஊஹூ தேவர்கள் – நிர்மதி
.
30. சித்திரசேனன் – தர்மவதி ( கச்சளா ).
31. அனுமன் – அனுமதம்.
32. வது வகை வீணையை வாசிப்பவன், ராவணன் அவனது வீணையின் பெயர் – ராவணாசுரம்.
இது தவிர முதலாம் மகேந்திர வர்ம பல்லவன் கண்டு பிடித்த வீணை பரிவாதினி.
அவன் கண்டு பிடித்த இராகம் சிம்மேந்திர மத்யமம்.அவர் கண்டுபிடித்த தாளம் சிம்ம நர்த்தனம். சங்க்கீர்ணன் ஜாதியை தாள வகையில் கண்டுபிடித்தவர் என்றும் பிரபலம் செய்தவர் என்றும் இரு வேறு கருத்துக்கள் உண்டு.
(Thanks to Ms. Jayashree Parur)