விசாலாட்சி உமையே! – Kannadasan

விசாலாட்சி உமையே! – Kannadasan
0Shares
உள்ள நாள் வரையிலே நன்மையும் தீமையும்
ஒன்றென்றே எண்ண வரம்தா
உறவோடு பகையையும் இரவோடு பகலையும்
ஒருமித்துப் பார்க்க் வரம் தா
வெள்ளம்போல் செல்வமும் வறுமையும் சமமென்று
விளையாடும் வாழ்க்கை வரம் தா
விதியென்றும் வலியதே மதியென்றும் சிறியதே
வினை தீர்த்து நல்ல துணை தா
பள்ளம் போல் இகழையும் மலைபோல் புகழையும்
பந்தாடும் வீர நிலைதா
பழிவாங்கும் பசியையும் பலசுவை உணவையும்
பதறாமல் கொள்ள வரம் தா
அள்ளியிடும் கையினால் அர்த்த சாமத்திலும்
அருள் செய்யும் அன்பு மயிலே
அறமுடைய வணிகர் குலம் சிலைவைத்த தேவியே
அழகு விசாலாட்சி உமையே!
KANNADASAN

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *