காஞ்சியில் காட்சி தரும் காமாக்க்ஷியே
பல்லவி
காஞ்சியில் காட்சி தரும் காமாக்க்ஷியே
காணும் காட்சியெல்லாம் உனதாட்சியே
ஊரெங்கும் வீதியிலும் வீட்டினிலுள்ளும்
பக்தர்களின் உள்ளத்திலும் கோவில் கொண்டாயே
(காஞ்சியில்..)
சரணம் 1
மண்ணாய் மண்ணில் செடியாய் செடியில்
மலராய் மலரில் தேனாய்
புழுவாய் பருந்தாய் பிறவியில் பலவாய்
அவற்றுள்எமை பெற்றாயே
மறைவாய் உருவாய் உருவின் பொருளாய்
முன்னும் பின்னும் ஆனாய்
வருவாய் வந்தருள் தருவாய் தந்தது
காப்பாய் காமாக்ஷி தாயே
(காஞ்சியில்…)
சரணம் 2
நிழல் தரும் மரமாய், நிறைந்திடும் கனியாய் ,
பயிராய் ,பயிர்வளர் கதிராய்
கதிர் தரும் ஒளியாய் ,உயிர்தரும் காற்றாய்
வேராய், வேர்த்தொடும் நீராய்
ஊண் வளர் உணவாய் ,நோயறு மருந்தாய்
அன்பாய், ஆசை கடலாய்
உறவாய், சகலமும் நீயாய் நின்றாய்
காப்பாய் காமாக்ஷி தாயே
(காஞ்சியில்..)
– ஸ்ரீரங்கம் ரமேஷ்