கருணை கொண்ட கற்பகம்மா

கருணை கொண்ட கற்பகம்மா
0Shares

கருணை கொண்ட கற்பகம்மா

 

பல்லவி

 

கருணை கொண்ட கற்பகம்மா

கண் தூங்கா தாய் நீயம்மா

மண் வாழும்  மக்கள் எல்லாம்

உன் காலடியில் சரணம் தாயே

 

சரணம் 1

 

பெண் நீயே இங்கு

தாய்க்கெல்லாம் தாயாய்  நின்றாய்

முன்வருவது எல்லாம் கண்டு

எமை என்றும் நீயே காப்பாய்

தான் என்றும் தன்னது என்றும்

ஒன்றில்லை கருணை தாயே

எல்லாமும் நீயே ஆனாய்

உனதான எம்மை காப்பாய்

(கருணை கொண்ட)

சரணம் 2

 

மந்திரங்கள் வேதங்கள் சொல்லி

மாதவங்கள் செய்வது அறியோம்

தந்திரமும் சூதும் அறியோம் 

வேற்றுமையும் பழியும் அறியோம்

எங்களுக்குச் சொந்தம் நீயே

உனை மட்டும் வேண்டி கிடப்போம்

மங்காத வாழ்வு தந்து

எமை அருள்வாய் தங்கத்  தாயே 

கருணை கொண்ட)

 

 —ஸ்ரீரங்கம் ரமேஷ்

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *