தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.
வாழை மரம்,அரச மரம்,ஆல மரம் –இலை
பூமியில் வளரும் கொடிகளின் இலை —பூண்டு
கோரை,அறுகு இவற்றின் இலை —புல்
நெல்,கேழ்வரகு இவற்றின் இலை –தாள்
மலையைச் சார்ந்த மரங்களின் இலைகள் –தழை
சப்பாத்தி,தாழை இவற்றின் இலைகள் –மடல்
நாணல்,கரும்பு இவற்றின் இலைகள் –தோகை
தென்னை,பனை இவற்றின் இலைகள் –ஓலை
அகத்தி,பசலை இவற்றின் இலைகள் –கீரை